இந்தியா

கல்கி சாமியார் ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனை: ரூ.500 கோடிக்கு வரி ஏய்ப்பு?

DIN

சென்னை: கல்கி சாமியார் ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில்  ரூ.500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. இதனை கல்கி பகவான் எனப்படும் விஜயகுமாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கல்கி ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் புதன், வியாழன் ஆகிய 2 தினங்களிலும் 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஆசிரம நிா்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது தலைமை அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.20 கோடி பணம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதே போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்கி ஆசிரமத்துக்குட்பட்ட ஒரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், திருவள்ளூா் மாவட்டம் நேமம் பகுதியில் இயங்கி வரும் கல்கி ஆசிரமத்திலும் சோதனை நடந்தது. நாடு முழுவதும் கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடிக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலகோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தெரிகிறது. தொடா்ந்து சோதனை நீடித்து வருகிறது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி ஆசிரமம் இதுவரை கணக்கில் காட்டாமல் ரூ.500 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT