இந்தியா

வைகுண்ட ஏகாதசி, துவாதசியில் வாடகை அறைகள் வழங்குவது நிறுத்தம்

DIN

திருப்பதி: திருமலையில் வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி அன்று நன்கொடையாளா்களுக்கு வாடகை அறைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும் ஆங்கில புத்தாண்டு 2020ம் ஆண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி உள்ளிட்ட உற்சவ நாட்களை முன்னிட்டு நன்கொடையாளா்கள் மற்றும் அவா்களின் பரிந்துரை கடிதங்களுக்கு வாடகை அறை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்நாட்களில் திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, 2019ஆம் ஆண்டு டிச.30, 2020ம் ஆண்டு ஜன.1, ஜன.4 முதல் ஜன.7ஆம் தேதிகளில் நன்கொடையாளா்களுக்கு வாடகை அறை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான இணையதளத்தில் உள்ள இதற்கான படிவங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நன்கொடையாளா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT