இந்தியா

பாலிவுட் படங்களில் நடித்துள்ள 'பிரபல நைஜீரிய நடிகர்' தில்லி விமானநிலையத்தில் கைது

DIN

பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஓலமிலேகன் எம் அக்னபி ஓஜோரா, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர். 

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் டெர்மினல் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த போது அங்கிருந்த பாதுகாவலர்களால் பிடித்து விசாரிக்கப்பட்டார். 

அந்த நடிகர், விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவாவுக்கு செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். இதையடுத்து அவரிடம் விசாரித்த போது, அவரது விசா காலாவதியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், பின்னர் குடியேற்ற மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை தொடர்பு கொண்டு நைஜீரிய நடிகரின் விசா 2011-ல் காலாவதியானதை உறுதி செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

"கைது செய்யப்பட்ட நைஜீரிய நடிகர் சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது நாட்டிலும் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். ஆனால், அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்தார்" என்று சிஐஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், விசாரணைக்காக அவர் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT