ஒருவர் நடந்துகொண்டிருக்கும்போதே சரிந்த நடைபாதை: திடுக்கிட வைக்கும் விடியோ
பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிந்து விழுந்த விபத்துக்குள்ளான அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனுமிடத்தில் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போதே அப்பகுதியில் பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிந்து விழுந்த விபத்துக்குள்ளான அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
இதில் அங்கிருந்த மற்றொருவரும் நிலை தவறி பள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு இரு சக்கர வாகனமும் அந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
திடுக்கிட வைக்கும் இந்த விடியோப் பதிவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.