நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர். 
இந்தியா

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்?  இஸ்ரோ ஆய்வு 

விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

DIN

பெங்களூரு: விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரானது, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க வேண்டிய தருணத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அதையடுத்து அதனுடனான தொடர்பினை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறு வந்தது. செப்டம்பர் 21-ஆம் தேதி வரைதான் நிலவின் குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்பதால் அதற்குள் ஏதாவது தகவலைப் பெற தீவிர முயற்சிகள் நடந்து வந்தது,

இந்நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், 'சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது. விக்ரம் லேண்டருடன் தொடர்பை இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT