இந்தியா

கேரளத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா உறுதி: பினராயி விஜயன்

DIN


கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோட்டில் இருந்து 12 பேர், எர்ணாகுளத்தில் இருந்து 3 பேர், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 8 பேர், பாலக்காட்டில் இருந்து ஒருவர் ஆகியோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 191 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர். 67 பேருக்கு நோய்த் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததால் பரவியுள்ளது. 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT