இந்தியா

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சிக்கல்

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தாலும், மறுபக்கம் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள்.

நாள்தோறும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். கரோனா பாதித்தது முதல் தனிமைப்படுத்துதல், சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல் காத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கு உதாரணம், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞர், கரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். ஆனால், தன்னால், தனது வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தார் நடந்து சென்ற வழியில், யாரும் நடந்து போகக் கூடாது, அப்படி போனால் அவர்களுக்கும் கரோனா வந்து விடும் என்று தங்களது அக்கம் பக்கத்தினர் கூறுவதாகவும், எங்கள் வீட்டுக்கு தினமும் பால் விநியோகித்து வந்தவரிடமும் இதுபோலக் கூறியதால் அவரும் பால் விநியோகிப்பதை நிறுத்திவிட்டார்.

நாங்கள் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது. நாங்கள் இங்கிருந்து செல்கிறோம் என்று கலக்கத்தோடு கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT