முகப்பு
இந்தியா

ஜோத்பூர் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவன்

ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே ஜோயிந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2020 at 1:54 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே ஜோயிந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்த 5 வயது சிறுவன் ரோஹித், இன்று காலை விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னதாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.