கரோனா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் பலி
மேற்கு வங்கத்தில் கரோனாவால் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனாவால் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரம், தில்லி, குஜாரத், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் கரோனாவால் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார். கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 69 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். மேற்கு வங்கத்தில் கரோனாவால் இதுவரை 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.