இந்தியா

கேரள சுற்றுலாத்துறை அமைச்சரின் மகனுக்கு கரோனா

DIN

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதனிடையே தமது மகனுகு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.  அவருக்கு கரோனா இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால் அவரது மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 10,517 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT