கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு (77) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், எனது உடல்நிலையில் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. எனினும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீப நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.