Karnataka CM, his daughter test positive for COVID-19 
இந்தியா

எடியூரப்பாவின் மகளுக்கு கரோனா தொற்று உறுதி

கா்நாடக முதல்வா் பி.எஸ் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

UNI


பெங்களூரு: கா்நாடக முதல்வா் பி.எஸ் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். 

இந்நிலையில், தற்போது அவரது மகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்றிரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், மாநில பாஜக துணைத் தலைவரும் முதல்வரின் மகனுமான பி.டி விஜயேந்திரா மருத்துமனைக்குச் சென்று அவரது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

தனது தந்தை நன்றாக இருக்கிறார். மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறினார். 

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, முதல்வரின் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எத்தனை பேர்?

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT