இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,092 பேருக்குத் தொற்று, 13 பேர் பலி 

UNI

தெலங்கானாவில் புதன்கிழமை இரவு வரை புதிதாக 2,092 பேருக்கு கரோனா தொற்று  பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

அந்த மாநிலத்தில் நாளொன்றுக்கு புதிதாக இரண்டாயிரம் பேருக்குத் தொற்று பதிவாகி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,092 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 73,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 13 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 589 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 21,346 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 1,550 பேரின் முடிவுக்காக காத்திருக்கின்றன. இதுவரை தெலங்கானாவில் 5,43,489 கரோனா வைரஸ் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், 1,289 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், மீட்பு விகிதம் 71.3 ஆக உள்ளது. இந்தியாவில் மீட்பு விகிதம் 67.19  ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT