இந்தியா

கர்நாடகத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு

ANI

கர்நாடகத்தில் பெய்த கனமழையால் சிக்மகளூர் மாவட்டம் முதிகேரே அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாகத் துணை ஆணையர் தெரிவித்தார்.

கன மழை காரணமாக முதிகேரே அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உடுப்பி மற்றும் கொடகு மாவட்டங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தும், வாகனங்கள் தண்ணீரில் மிதந்தும், கொடகு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. 

மேலும், ஆகஸ்ட் 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கரையோர கர்நாடகாவிலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி தெற்கு கர்நாடகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT