கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் அண்மை தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அங்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 147 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.  இத்துடன் மாநிலத்தில் கரோனாவல் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அவர்களில் 2,227 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், 9,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதுவரை அங்கு 124 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT