ஆக்ராவில் கட்டட விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி
ஆக்ராவில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆக்ராவில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தில்லியின் ஆக்ராவில் உள்ள தோலிகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் குறுகிய சாலைகளால் மீட்பு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாததால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றது.
இதில் குழந்தை உள்பட மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.