ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 3,384
ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மட்டும் 3,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மட்டும் 3,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 25-ம் தேதி நிலவரப்படி இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளதாவது,
புதிதாக பாதிக்கப்பட்ட 3,384 பேரில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 1,256 பேர் உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 75,760 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 60,472 ஆக உள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.