இந்தியா

ஒடிசாவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

DIN

ஒடிசாவில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

பிஜூ தனதா தளம் (பி.ஜே.டி.) கட்சியை சேர்ந்த சந்த்பாலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பியோமகேஷ் ராய்க்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''தொகுதியில் சென்று வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாததற்காக என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் அருளால் தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. தொகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்க்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையானவற்றை செய்ய இயலாததே வருத்தமாக உள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

பி.ஜே.டி. கட்சியில் இதுவரை 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வில் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT