தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்குகரோனா
தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தில்லியில் ஒரேநாளில் 75,230 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 3734 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,82,058 ஆக உயா்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 29,120 போ் சிகிச்சையில் இருந்தனா். அதேவேளையில், நோய்த் தொற்றுக்கு மேலும் 82 போ் உயிரிழந்தனர். இதன்மூலம், நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 9424 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 4834 குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 5,43,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட் பகுதி 5759 ஆக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.