ஹரியானாவில் சாலை விபத்து: ஓட்டுநர் பலி, 20 பேர் காயம்
ஹரியானாவில் கத்வார் கிராமத்திற்கு அருகே ஹிசார்-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹரியானாவில் கத்வார் கிராமத்திற்கு அருகே ஹிசார்-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தீவிர காயமடைந்த ஒருவர் சண்டிகருக்கு அனுப்பப்பட்டார்.
விபத்து நடந்தபோது காலையில் மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.