அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு
அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் தேஜ்பூரில் சனிக்கிழமை காலை 10.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் பதிவான நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.