முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா

கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 டிசம்பர், 2020 at 9:55 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM


கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2,859 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 328 பேருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து, கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 59,467 ஆகியுள்ளது. மேலும் 4,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, நோய்த் தொற்றிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,77,616 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் 23 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,441 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.