லே-ஜம்மு இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்
லே மற்றும் ஜம்மு இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினார்.
லே மற்றும் ஜம்மு இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமானச் சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியது.
லடாக் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் வேண்டுகோளுக்கிணங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை முதல் லே மற்றும் ஜம்முவுக்கு இடையில் ஏர் இந்தியா விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த விமானங்கள் இயக்கப்படும். லே மற்றும் ஜம்மு இடையே விமானங்கள் மீண்டும் தொடங்குவது பல மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக லே-ஸ்ரீநகர் மற்றும் லே-மணாலி சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், லடாக் மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்குப் பயணிக்க விமானங்களை மட்டுமே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.