கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப், ஹரியாணா மருத்துவர்கள் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்ப்பாட்டம்

பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மருத்துவர்கள் கருப்பு ரிப்பன்களை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

IANS

பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மருத்துவர்கள் கருப்பு ரிப்பன்களை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து கரோனா சிகிச்சைப்பிரிவு, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிரப் பிற மருத்துவ சேவைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறக்கணிக்கும்படி இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டது. அதன்படி இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் போன்ற மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பணி நேரத்தில் கருப்பு ரிப்பன்களை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். சில மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT