முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் 1990 முதல் 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் 1990-ஆம் ஆண்டு முதல் குறைந்தது 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Updated On : 12 டிசம்பர், 2020 at 3:13 PM
138 journalists killed in Pakistan since 1990
பகிர்:

பாகிஸ்தானில் 1990-ஆம் ஆண்டு முதல் குறைந்தது 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகளாவிய பத்திரிகை பற்றிய வெள்ளை அறிக்கையில், ஈராக், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளும் பத்திரிகை பயிற்சிக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என்று பட்டியலிட்டுள்ளது.  

இந்தியத் துணைக் கண்டத்தில், 1990 முதல் பாகிஸ்தானில் (138) மற்றும் இந்தியாவில் (116) பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆசிய பசிபிக் பகுதியில் மொத்தம் 40 சதவீத பத்திரிகையாளர்கள் இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. 

Advertisement

2020-ஆம் தொடக்கத்திலிருந்து 15 நாடுகளில் குண்டுவெடிப்பு மற்றும் தீ விபத்து போன்ற சம்பவங்களில் இதுவரை 42 பத்திரிகையாளர்களும், கடந்த 2019-ஆம் ஆண்டில் 49 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.