முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் 4 பி.எல்.எஃப்.ஐ. தீவிரவாதிகள் கைது

ஜார்க்கண்டின் சிமெட்கா மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் தடைசெய்ய மக்கள் விடுதலை முன்னணியை(பி.எல்.எப்.ஐ) சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
4 PLFI militants arrested in Jharkhand
பகிர்:

ஜார்க்கண்டின் சிமெட்கா மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் தடைசெய்ய மக்கள் விடுதலை முன்னணியை(பி.எல்.எப்.ஐ) சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

பானோ காவல் நிலைய பகுதியில் உள்ள கனர்வா காட்டில் நடந்த சோதனையில் சிம்டேகா மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் ஷாம்ஸ் தப்ரெஸ் தெரிவித்தார். 

குறிப்பிட்ட பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தி, தீவிரவாதிகளைக் கைது செய்தனர். மேலும், லோஹர்டாகாவில், தடைசெய்யப்பட்ட அமைப்பின் பகுதி தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சென்ஹா காவல் நிலைய பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். அவர் மீது குறைந்தது ஆறு குற்ற வழக்குகள் உள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 33 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு சீடான் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.