ம.பி.யில் இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை
மத்தியப் பிரதேசத்தின் பலகாட் மாவட்டத்தின் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்தின் எல்லையில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பலகாட் மாவட்டத்தின் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
நக்சல்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கொல்லப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களில் ஒருவர் மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரைச் சேர்ந்தவர் என்றும் படங்களின் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.