கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"மாநிலத்தில் புதிதாக 6,169 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 5,349 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் 22 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,892 ஆக உயர்ந்துள்ளது.
4,808 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,55,644 பேர் குணமடைந்துள்ளனர். 62,802 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்."