'இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய தில்லி மக்களுக்கு நன்றி' - பிரஷாந்த் கிஷோர் ட்வீட்
இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய தில்லி மக்களுக்கு நன்றி என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்தியா'இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய தில்லி மக்களுக்கு நன்றி' - பிரஷாந்த் கிஷோர் ட்வீட்
இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய தில்லி மக்களுக்கு நன்றி என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய தில்லி மக்களுக்கு நன்றி என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் கருத்து பதிவிட்டுள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி சுமார் 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் மக்களுக்கு நன்றி தெரிவித்த்துள்ளார். இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு தில்லி மக்களுக்கு நன்றி என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.