இந்தியா

கேஜரிவால் பதவியேற்பு விழாவுக்கு இவருக்குத்தான் சிறப்பு அழைப்பாம்

DIN


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தில்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், பிற மாநில முதல்வர்களுக்கோ, அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அழைப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழாவில், ஒரே ஒரு சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாம். ஆம், அவர் யாரென்றால், 'பேபி மஃப்ளர்மேன்' என்று அழைக்கப்படும் ஆவ்யன் டோமர்தான். 

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, கேஜரிவாலைப் போல ஆடை அணிந்துகொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு திரும்பியப் பக்கமெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைதான். 

பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு ஆவ்யன் டோமருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வயதுக்கும் குறைவான இந்த குழந்தை, கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்துகொண்டு, கேஜரிவாலைப் போல ஒட்டு மீசையும் வைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றியின் உற்சாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது.

கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் வசிக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர் ராகுல் டோமரின் குழந்தைதான் ஆவ்யன் டோமர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT