முகப்பு
இந்தியா

யோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப்பிரிவு, உத்தரப் பிரதேச காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:50 PM
பகிர்:

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப்பிரிவு, காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின்படி, பத்திரிகையாளர் என்ற போர்வையில் பயங்கரவாதி இக்கோயிலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோரக்நாத் கோயிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோரக்பூர் காவல்துறையினர் உள்ளூர் பத்திரிகையாளர்களின் நற்சான்றிதழ்களை முறையாக ஆராய்ந்த பின்னர், புதிய புகைப்பட அடையாள அட்டைகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

லக்னோவில், யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு நலன் கருதி, பத்திரிகையாளர்களிடமிருந்து சற்று இடைவெளியில் இருப்பார். ஆனால் கோரக்பூரிலுள்ள ஊடகங்கள் அவரை எளிதில் அணுக முடியும். அவர் கோரக்பூர் பயணத்தில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'ஜனதா தர்பாரில்' உள்ளூர் மக்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.