முகப்பு
இந்தியா

வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் காங்கிரஸ் தலைவர்

சஷி தரூர் தில்லி நீதிமன்றத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விண்ணப்பத்துள்ளார்.

Updated On : 18 பிப்ரவரி, 2020 at 3:50 PM
பகிர்:

சஷி தரூர் தில்லி நீதிமன்றத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விண்ணப்பத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இங்கிலாந்து, பாரிஸ் மற்றும் நோர்வே செல்ல முடிவெடுத்தார். அதற்கான விண்ணப்பத்தை தில்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அனுமதி கோரியுள்ளார்.

இது குறித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இந்த விவகாரம் பிப்ரவரி 22 ம் தேதி விசாரிக்கப்படும்.

Advertisement

சஷி தரூர், அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

சுனந்தா புஷ்கர் ஜனவரி 17, 2014 இரவு நட்சத்திர ஹோட்டலின் அறையில் இறந்து கிடந்தார். பின்னர் தரூர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும்போது, நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.