டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில், ஊருக்குப் போக அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு புறப்பட்ட நபர்
சொந்த ஊருக்குப் போக பேருந்து டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில், தெலங்கானா அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஹைதராபாத்: சொந்த ஊருக்குப் போக பேருந்து டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில், தெலங்கானா அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தை மர்ம நபர் ஓட்டிச் சென்றுவிட்டதாக புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த தெலங்கானா காவல்துறை, தெலங்கானா அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விகரபாத் மாவட்டத்தின் தந்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
Advertisement
பேருந்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நபர், சொந்த ஊருக்கு வர டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்றும், அவரது ஊர் வந்ததும், பேருந்தை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.