இந்தியா

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ஐ.நா. தகவல்

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது

ANI

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை இரண்டு காவலர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் தில்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தலைநகர் தில்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடகிழக்கு தில்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குரோட்டஸ், தில்லியின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில்,  ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். பாதுகாப்புப்படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT