இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவன்திபுரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பயங்கரவாதியின் அடையாளம் தொடர்பான விசாணை நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.