ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், சண்ட்வா அருகே கடந்த நவம்பர் 22ஆம் தேதி போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது, மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில், நான்கு போலீசார் இறந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 மாவோயிஸ்டுகளை லதேஹர் மாவட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அங்குள்ள திதிர் மஹுவா வனப்பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.