இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ராணுவ போர்ட்டர்கள் 2 பேர் பலி

DIN

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தில் இந்திய ராணுவத்தின் சுமைதூக்கும் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.  

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT