இந்தியா

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் ஐயப்ப சரண கோஷம்

DIN

சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பி ஜோதியைத் தரிசனம் செய்தனர்.

பந்தளம் அரண்மனையிலிருந்து நேற்று புறப்பட்ட திருவாபரணப் பெட்டி இன்று (புதன்கிழமை) மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது. 

அதிலிருந்த நகைகள் சுவாமி ஐயப்பனுக்கு சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகரஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது சபரிமலை கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷங்கள் எழுப்பினர். 

மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலை கோயில் வளாகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளும் மேற்கொண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT