தை அமாவாசை: பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தை அமாவாசையையொட்டி பிதுர் தர்ப்பணம் கொடுத்து மக்கள் புனித நீராடினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தை அமாவாசையையொட்டி பிதுர் தர்ப்பணம் கொடுத்து மக்கள் புனித நீராடினர்.
வட மாநிலங்களில் தை அமாவாசையை "மவுனி" அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் புனித கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி முன்னோர்களை வழிபடுவது மரபு.
அதன்படி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான மக்கள் இன்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.