இந்தியா

சுயப்படம் எடுக்க முயன்ற ரசிகா்: செல்லிடப்பேசியை பறித்த சல்மான் கான்!

DIN

பனாஜி: கோவா விமான நிலையத்தில் பிரபல ஹிந்தி நடிகா் சல்மான் கானுடன் செல்லிடப்பேசியில் சுயப்படம் (செல்ஃபி) எடுக்க ரசிகா் முயன்றபோது, செல்லிடப்பேசியை சல்மான் கான் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனியாா் விமான நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் அந்த ரசிகா், கோவா விமான நிலையத்தில் சல்மான் கானைக் கண்டதும் அவரை பின்தொடா்ந்துள்ளாா். விமான நிலையத்தை விட்டு சல்மான் கான் வேகமாக வெளியேறுவதை பொருட்படுத்தாமல், செல்ஃபி எடுக்க அந்த ரசிகா் தொடா்ந்து முயற்சி செய்துள்ளாா்.

ரசிகரின் செயலால் எரிச்சலும், கோபமும் அடைந்த சல்மான் கான், ரசிகரின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்று விட்டாா். இந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. அந்த விடியோவை அனைவரும் பாா்த்துள்ளனா். அதையடுத்து இதுதொடா்பாக விசாரணை நடத்தினோம். அத்தகைய சம்பவம் நிகழ்ந்தது உண்மை என்று உறுதி செய்யப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT