​மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,741 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,741 பேருக்கு கரோனா: மேலும் 213 பேர் பலி

​மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,741 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,741 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6,741 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 213 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,67,665 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 10,695 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 4,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,49,007 பேர் குணமடைந்துள்ளனர். 1,07,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 969 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,828 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 70 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 5,402 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 70 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT