முகப்பு
இந்தியா

பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்

இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தையின் பயனாக படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றுள்ளார்.

Updated On : 17 ஜூலை, 2020 at 10:46 AM
பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்
பகிர்:

புது தில்லி: இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தையின் பயனாக படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றுள்ளார்.

லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்  இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று லடாக் பகுதிக்கும் நாளை ஸ்ரீநகருக்கும் பயணம் செய்கிறார்.

புது தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராஜ்நாத் சிங் லே நகருக்கு இன்று காலை சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவணேவும் சென்றுள்ளனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.