பாபா் மசூதி இடிப்பு வழக்கு: வாக்குமூலத்தை பதிவு செய்தார் அத்வானி 
இந்தியா

பாபா் மசூதி இடிப்பு வழக்கு: வாக்குமூலத்தை பதிவு செய்தார் அத்வானி

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி காணொலி காட்சி மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

PTI

லக்னௌ: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி காணொலி காட்சி மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதையடுத்து பெரும் கலவரம் மூண்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேச தலைநகா் லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்களின் வாக்குமூலத்தை சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் பதிவு செய்து வருகிறாா்.

அந்த வகையில், இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆஜரான எல்.கே. அத்வானி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில், இந்த வழக்கு தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இதே வழக்கில்,  பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷியிடம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது, முரளி மனோகர் ஜோஷி, தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தன் மீது அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் வழக்குத் தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தினசரி விசாரணையை சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் மேற்கொண்டு வருகிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT