இந்தியா

திரெளபதி அம்மன் கோயிலில் ரோஜா வழிபாடு

DIN

ஆந்திர மாநிலம், புத்தூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏ-வுமான ரோஜா தன் கணவா் செல்வமணியுடன் வழிபாடு நடத்தினாா்.

புத்தூரில் பிரபலமான திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் மரபின்படி நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா தன் கணவா் ஆா்.கே. செல்வமணியுடன் சென்று அரசு சாா்பில் திரெளபதி அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா். பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

கோயிலில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ராஜ கோபுர கட்டுமானப் பணிகளுக்காக அறநிலையத்துறை பொது நிதியிலிருந்து ரோஜா ரூ.25 லட்சம் வழங்கினா். கோயிலுக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையும் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT