இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 171 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் பலி

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 171 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,271 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் 201 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கரோனா பாதிக்கப்பட்டு 2,803 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 5,624 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

புதிய வழக்குகளில், 70 பேர் பரத்பூரிலிருந்து, 34 ஜெய்ப்பூரிலிருந்து, 23 ஜலவாரில் இருந்து, 12 ஜோத்பூர் மாவட்டங்களிலிருந்து தொற்று பதிவாகியுள்ளது. 

கோட்டா மற்றும் ஆல்வாரில் மேலும் 10 பேருக்கும், தௌசா மற்றும் ஜுன்ஜுனுவில் தலா நான்கு, மற்றும் சுருவில் இரண்டு பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தோல்பூர் மற்றும் டோங்க் மாவட்டங்களில் தலா ஒரு புதிய வழக்குப் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT