இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 120 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 120 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மட்டும் அதிகபட்சமாக 9,887 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 1,14,073 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 6,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,15,942 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 2739 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82968ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 120 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 2849-ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT