மேற்கு வங்கத்தில் 2 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று
மேற்கு வங்கத்தில் 2 நீதிபதிகளுக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2 நீதிபதிகளுக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மட்டும் அதிகபட்சமாக 9,887 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 2 மாவட்ட நீதிபதிகளுக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான 2 நீதிபதிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 7,3030 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை 366 பேர் பலியாகியுள்ளனர்.