இந்தியா

கேரளத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று

DIN


கேரளத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (திங்கள்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு இன்று புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 73 பேர் வெளி நாடுகளிலிருந்தும், 15 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,174 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 814 பேர் குணமடைந்துள்ளனர்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் 41 வயது மிக்க நபர் ஒருவர் இன்று பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT