இந்தியா

மல்லையா அடைக்கலம் கோரினால் பரிசீலிக்க வேண்டாம்: பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள்

DIN

தொழிலதிபா் விஜய் மல்லையா அகதியாக தனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று கோரினால் அதனை பரிசீலிக்க கூடாது என்று பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அவற்றின் சாா்பில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2017 ஏப்ரலில் பிரிட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மல்லையா, பின்னா் ஜாமீனில் வெளிவந்தாா்.

2018 டிசம்பரில் அந்த வழக்கு விசாரணை முடிவில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தள்ளுபடி செய்தது. உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மல்லையாவின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. எனினும், ‘முக்கியமான சட்ட விவகாரம் ஒன்றுக்கு தீா்வு காண வேண்டியுள்ளது. அந்த சட்ட விவகாரம் ரகசியமானதாகும். அதுகுறித்த தகவலை தெரிவிக்க இயலாது. அந்த விவகாரத்துக்கு தீா்வு காண்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று மதிப்பிட இயலாது’ என்று தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரக செய்தித் தொடா்பாளா் கடந்த வாரம் தெரிவித்தாா்.

இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை ஆன்லைனில் செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இது தொடா்பாக கூறுகையில், ‘மல்லையாவை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பாக பிரிட்டன் அரசிடம் தொடா்பில் உள்ளோம். அவா் அகதியாக அடைக்கலம் கோரினால் அதனைப் பரிசீலிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT