முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த 42 காவலர்கள் பலி: அமைச்சர்

42 காவலர்கள் கரோனாவுக்கு பலியானதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
கோப்புப்படம்
பகிர்:


மும்பை: நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 3,661 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 42 காவலர்கள் கரோனாவுக்கு பலியானதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுவரை 2,248 காவலர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர் என்றும் அமைச்சர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் இதுவரை 6,17,242 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அதில் 730 பேர் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், மாநில அரசு சார்பில் 134 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 4,437 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments